search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கலெக்டர் வீரராகவ ராவ்"

    ராமநாதபுரம் மாவட்டத்தில் மின் மோட்டார் பொருத்திய தையல் எந்திரம் பெற ஏழை பெண்கள் விண்ணப்பிக்கலாம் என்று கலெக்டர் வீரராகவ ராவ் தெரிவித்துள்ளார்.
    ராமநாதபுரம்:

    ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் வீரராகவ ராவ் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    ராமநாதபுரம் மாவட்ட சமூக நலத்துறை மூலம் விதவை, கணவரால் கைவிடப்பட்டோர், ஆதரவற்றோர், மாற்றுத்திறன் ஏழை பெண்களுக்கு மின் மோட்டார் பொருத்திய தையல் எந்திரம் வழங்க தகுதியான பயனாளிகள் விண்ணப்பிக்கலாம். ஆண்டுக்கு ரூ.72 ஆயிரத்திற்குள் தாசில்தாரிடம் பெறப்பட்ட வருமானச் சான்று, இருப்பிடச் சான்று தாசில்தாரிடம் பெற வேண்டும்.

    அல்லது ரே‌ஷன்கார்டு, பதிவு செய்யப்பட்ட நிறுவனத்திடம் இருந்து பெறப்பட்ட 6 மாத கால தையல் பயிற்சி சான்று, வயது சான்று (20 முதல் 40 வரை) அல்லது கல்வி சான்று அல்லது பிறப்பு சான்று, சாதிச்சான்று, விதவை, கணவரால் கைவிடப்பட்டோர், ஆதரவற்றோர், மகளிர், மாற்றுத்திறன் பெண் சான்று, ஆதார் அட்டை ஆகியவற்றின் நகலுடன் பாஸ்போர்ட் சைஸ் விண்ணப்பதாரரின் கலர் போட்டோ ஆகிய சான்றுகள் விண்ணப்பத்துடன் இணைக்கப்பட வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
    ராமநாதபுரம் தபால் கோட்டம் சார்பில் ஆயிர வைசிய மேல்நிலைப்பள்ளி மைதானத்தில் வங்கிச் சேவையினை மாவட்ட கலெக்டர் வீரராகவ ராவ் தலைமை வகித்து தொடங்கி வைத்தார்.

    ராமநாதபுரம்:

    ராமநாதபுரம் தபால் கோட்டம் சார்பில் ஆயிர வைசிய மேல்நிலைப்பள்ளி மைதானத்தில் வங்கிச் சேவையினை மாவட்ட கலெக்டர் வீரராகவ ராவ் தலைமை வகித்து தொடங்கி வைத்தார். கோட்ட கண்காணிப்பாளர் வீரபுத்திரன் வரவேற்றார். அஞ்சலக வங்கிச் சேவைக்கான முதலாவது கணக்கினை கலெக்டர் தொடங்கினார்.

    ராமநாதபுரம் மாவட் டத்தில் மொத்தம் 306 அஞ்சலக கிளைகள் செயல்படுவதாகவும் இவற்றில் கிராமப்புறங்களில் செயல்படும் தபால் நிலைய கட்டிடங்கள் மோசமான நிலையில் இருப்பதால் அரசுக் கட்டிடங்களில் செயல்பட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோட்ட கண்காணிப்பாளர் வீரபுத்திரன் கலெக்டரிடம் கோரிக்கை வைத்தார்.

    இது சம்பந்தமாக கடிதம் அளித்தால் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்று கலெக்டர் தெரிவித்தார்.

    இதை தொடர்ந்து புதுடெல்லியில் பிரதமர் மோடி தொடங்கி வைத்த வங்கிச்சேவை நிகழ்ச்சி காணொலி மூலம் ஒளிபரப்பு செய்யப்பட்டது. தொடர்ந்து வங்கி திறப்பு குறித்த சிறப்பு தபால் உறை வெளியிடப்பட்டது. கணக்கு தொடங்கியவர்களுக்கு கியூ ஆர் அட்டையை ராமேசுவரம் கோவில் தக்கார் குமரன் சேதுபதி வழங்கினார்.

    முதற்கட்டமாக ராமநாதபுரம் தலைமை தபால் அலுவகம், உச்சிப்புளி, மண்குண்டு, நாகாச்சி, ரெட்டையூரணி ஆகிய 5 இடங்களில் அஞ்சலக வங்கிச்சேவை தொடங்கப்படுகிறது.

    விழாவில் முதுகுளத்தூர் எம்.எல்.ஏ. மலேசியா பாண்டியன், தபால் துறை உதவி இயக்குநர் பாண்டியராஜன், தபால் உதவி கோட்ட கண்காணிப்பாளர் விஜயகோமதி, வர்த்தக சங்க தலைவர் ஜெகதீசன், ஆயிரவைசிய மகாஜன சபை தலைவர் மோகன், பள்ளி தாளாளர் ஜெயக்குமார், நிர்வாகி பார்த்தீபன், பா.ஜனதா மாவட்ட தலைவர் முரளிதரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    ×